Thursday, September 15, 2011

குடி

(இது கவிதை நடை என்று நினைத்துவிடாதீர்கள்.)

  • விரல் இடுக்கில் சுவாசித்தேன்,
கோப்பைகள் நிறைய அருந்தியிருக்கிறேன்,
போகங்கள் அனைத்தையும் அனைத்திருக்கிறேன்.
அனைத்திலும் ஒன்றும்மில்லை - என்று
 மனம் படடினத்தார் தழுவிய
பாடலைப் பாடுகின்ற்ன.
  • எமனுக்கு ஏன்காவியங்கள் தெரியும்.
ஆனால்,    எவனுக்கும-
தெருவில் படுத்துறங்கும்
எனது காவியம் தெரியாது.
  • நாணயம் இல்லாவிட்டால்
ஏனைய அனைவரும் உதறிவிடுவர்...
-ஏன்? கட்டிய மனைவியும் கூடவா..?
  • யாரிடமும் சொல்லிவிடதீர்கள்
என் மனைவி, இன்று பிரத்தியார் மனைவி-
சே..அ....வள் பிரத்தியார் மனைவி.
  நாணய்ம் வாழ்க்கையை விழை பேசியது.
  • இன்று சொல்வது தான் உண்மை
நான் பார்த்த பெண்களில் -அவளும்
ஒருத்தி.
என் மேல் என்றேனும் காதலும்
கசிந்திருக்கலாம் ஆனால்
இரக்கம் ம்ட்டும் இல்லாமல் போய்விட்டது.
கால தாமதத்தால்,  கட்டிலில்
இடமில்லை என்றால்,
காசில்லை என்று கருவரையையும்
காலி செய்தாள்....
உன் வழியில் என்னை ஒதுக்கிவிட்டாய்,
கேள்விப்பட்டேன், எவனோடோ
நீயும் மதுவோடு பழகிவிட்டாய்.
  • என் காலத்தின் வழிப்ப்பாதையில் என்றோ
நான் நன்றாக் வாழ்ந்தேன்,
இன்றும் அனுபவிக்கின்றேன்,
அனைத்திலும் எச்சங்களே.
பிச்சையாக கிடைத்தாலும்
இச்சைகள் விடவில்லை.
  • உனக்காய் நான் இரக்கப்படுகிறேன்
நீ, என்னைப் புறிந்து கொள்ளும் காலத்தில்
நான் இல்லாத இங்கு 
நீ வந்து படுத்துவிடாதே..?

No comments:

Post a Comment